பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் தாள்கள் மூன்று வகைப்படும். ஒன்று, ஒரு ரூபாய் தாள் இரண்டு அல் லது மூன்று பகுதிகளாக கிழிந்து ஒன்றாக ஒட்டப்பட்டிருப்பது. எழுதிய தால் கறை படிந்திருப்பது. மூன்று , கிழிந்ததாலோ, எரிந்ததா லோ ரூபாய் தாளின் ஒரு பகுதி காணாமல் போவ து.
Reserve Bank of India (Note Refund) Rules, 2009 என்பதற்கு இணங்கி எல் லா வங்கிகளும் பொது மக்களிடம் (
தங்களின் வாடிக்கையாளர் கள் இ ல்லை என்றாலும்) அவர்கள் கொடு க்கும் பழைய ரூபாய் தாளுக்கு இணையான புதிய அல்லது பயன் படுத்தக்கூடிய ரூபாய் தாளை வழங்க அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.
ஒரு ரூபாயிலிருந்து இருபது ரூபா ய் வரை, ரூபாய் தாள் கிழிந்திருந்தால், அவற்றில் பெரிய பகுதி குறைந்த பட்சம் தாளின் ஐம்பது சதவிகிதம் இருக்க வேண்டும். அதா வது, கிழிக்கப்பட்ட ஒரு பகுதியாவது தாளின்
ஐம்பது சதவிகித த்தைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இரு க்கும் பணத் தாளின் மதிப்புக்கு சமமான மற்றொரு ரூபாய் தாள் கொடுக்கப்ப டும்.
ஐம்பது முதல் ஆயிரம் ரூபாய் தாள்கள் கிழிந்திருந்தால் அதில் 65 சதவிகிதம் இரு க்கும்பட்சத்தில் அதற்கு இணையான ரூபாய் தாள் கொடுக்க ப்படும்.
அப்பகுதி 40 முதல் 65 சதவிகித ம் இருந்தால் அந்த ரூபாய் மதிப்பில் 50 சதவிகிதம் உள்ள ரூபாய் தாள் கொடுக் கப்படும்.
அழுக்கடைந்த ரூபாய் தாள்களி ன் எழுத்துகள் மறையாமலும், அவை நல்ல ரூபாய் தாள்கள் என உறுதி செய்யப்படும் பட்சத்தில்,
அந்த ரூபாய் தாளுக்கு இணையான அல்லது 50 சதவிகித பணம் கொடு க்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள வரையறை க்கு மாறாக வேறு எப்படி இருந்தா லும் அந்த ரூபாய் தாள்களுக்கு இணையான மாற்று ரூபாய் தாள்கள் கொடுக்கப்படமாட்டாது.
– இராம. சீனிவாசன்
Advertisements
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், வர்த்தகம் | Tagged: எப்படி மாற்றுவது! ?, கிழிந்த, கிழிந்த ரூபாயை எப்படி மாற்றுவது! ?, கிழிந்த ரூபாய், ரூபாயை, ரூபாய், Notes, Rupee, torn, torn rupee, torn rupee notes |
Leave a Reply