அது என்ன குண்டலினி சக்தி..? அதை எழுப்புவது எப்படி?

அது என்ன குண்டலினி? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தை யை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது. அடிப் படையான உயி ராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத் தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங் கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள். உண்மையில் (more…)

மாணவர்கள் செய்யவேண்டிய சில‌ யோகாசனங்கள்!

10 முதல் 20 வயது உள்ள மாணவர்கள் பலன் பெறும்படி இந்த யோகா பயிற்சிகள் திட்டமிடப்பட்டவை. இளம் வயதிலேயே, ஒட்டு மொத்த உடலுக்கும் கூடுதல் ஆரோக்கியம் கிடைத்து, உடல் வைரம் போல் உறுதியாக இருக்கும். கவனச்சிதறல் இல்லாமல், எதையும் கூர்ந்து கவனி க்கும் திறன் அதிகரிக்கும். நினைவாற் றல் கூடும்.
 
தாடாசனம்
இதை பனைமர ஆசனம் என்று சொல்வார்கள். பனையானது காற்று அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர ஒடிந்து விடா து. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து (more…)

தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டும் 4 யோகாசனங்கள்

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோ டு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற் சியின் மூலம் மன அழுத்தம் குறை வதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய் வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காச னம், சர்வாங்கசனம் ஆகிய ஆசன ங்களை தவறாது செய்வதன்மூல ம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற் சாகமுடன் ஈடுபடலாம். இது (more…)

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நன்மைகள் பல தந்திடும் யோகா

யோகாசனம் மனதிற்கும் உடலிற்கும் ஏற்றது. பல்வேறு நோய்க ளில் இருந்தும் நமது உடலை பாதுகா த்து, நோய் ஏற்படாமலும் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு யோகாசனம் சிறந்த து என மருத்துவர்கள் பரிந்துரைக்கி ன்றனர். பிரசவ கால சிக்கல்களை தீர் க்க உதவுவ தோடு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் (more…)

யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.  
 
* தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.
 
*  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.
 
* ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.
 
* தியானம் செய்த பின் எவ் வாறு சாந்தியோகம் முக்கிய மோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கிய மாக செய் யவும்.
 
*  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய் யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
 
* சில முக்கிய ஆசனங்கள் அதிக (more…)

சூர்ய நமஸ்காரத்தில் உள்ள‍ பல்வேறு விதமான ஆசன வகைகள்

யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவ ற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோ காசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப்படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும்.

சூர்ய நமஸ்காரத்திலேயே பல்வேறு விதமான ஆசன வகைகள் வந்து விடும். எனினும் இப்போது (more…)

ராஜயோகம் – நான்கு வகைகள்

ராஜயோகம் நான்கு வகைப்படும். அவை மந்திர யோகம், லய யோகம், ஹடயோகம், ராஜயோகம் எனப் (more…)

காமத்தின் தீவிர பிடியில் யோகா- அதிர்ச்சி வீடியோ

காமத்தின் தீவிர பி (more…)

எண்ணிலடங்கா சித்திகளை பெற, மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள்

பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக் கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்ப தாகவும்,

அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவ தாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச் சரியான முறையி ல் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்ட கா லம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணி லடங்கா சித்திகளை கூட (more…)

காய்ச்சல் என்பது என்னவென்றால் …

காய்ச்சலுக்கும், சளிக்கும் மருந்து தேவையில்லை என்கிறார் நமது யோகா ஆசிரியர் சுப்ர மணியம்.

அதாவது சளி வந்தால் 7 நாள் இருக்கும். ஒரு சில காய்ச்சல் ஒரு நாள் இருக்கும், ஒரு சில காய்ச்சல் 3 நாள் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இல் லை.

காய்ச்சல் என்பது என்ன வென்றால், ஏதாவது பெரிய வியாதியை ஏற்படுத்தும் கிருமி உடலு க்குள் நுழையும் போது (more…)

யோகா செய்வது எப்படி?

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிர் ஷி தியான முறை யோகக் கலை அல் லது யோகாசனம் ஆகும்.  யோகாச னம் என்பது அந்த காலத்தில்  வாழ் ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்க ளை பார்த்து வடிவமைத்தார்கள் என் று பல தகவல்கள் இருந்தாலும்  இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்த வர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமா கவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.

முக்கியமான யோகாசனங்கள் சில (more…)

வயதுக்கேற்ற `யோகா’

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம்.

குழந்தைகள்: குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை ரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப் பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப் பைகளும் அதற்கு உறுது ணையாக இருக்கிறது. இவர் களுக்கு மார்புச்சளி, பசியி ன்மை, ஆஸ் துமா, செரியா மை, மலச் சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்பட லாம்.

செய்யவேண்டிய பயிற்சி:- 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வளர் இளம்பருவம்:- 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர (more…)

யோகா முத்திரை

யோகா, முத்திரை,
முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமை யானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல் களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த “பஞ்ச மஹாபூதங்கள்” ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப் படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக (more…)

யோகாவின் மூலம் உடல் அழகை மேம்படுத்த முடியுமா?’

கண்டிப்பாக முடியும்”.

* யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.

* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோ க்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் (more…)

யோகாசனங்கள்

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை. ஆசனங்கள் பலவகை.

1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.

1. சலபாசனம்
‘சலபம்’ என்ற வடசொல்லுக்கு ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம் ‘சலபாசனம்’ என்று பெயர் பெற்றது. மேலும் இந்த ஆசனத் தோற்றம் வெட்டுக்கிளி வடிவில் இருப்பதாலும் இப்பெயர் கொள்ளலாம். இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.

செய்முறை

  1. தரை விரிப்பின் மீது முதலில் குப்புறப்படுக்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக் கொள்ளவும்.
  2. முகவாய்க்கட்டை தரையில் படும்படி முகத்தை சற்று உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
  3. கை விரல்களை நன்கு மடக்கி தொடைகளுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.
  4. பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளைத் தரையில் அழுத்திக் கொண்டு தலை, நெஞ்சுப் பகுதி இரண்டு கால்களையும் சேர்ந்த மாதிரி ஒரே சமயத்தில் மேலே உயர்த்த வேண்டும்.
  5. கால்களை வளைக்காமல் 45 டிகிரி வரை உயர்த்த வேண்டும்.
  6. இதே நிலையில் பத்து முதல் இருபது வினாடிகள் வரை இருக்கலாம். இப்போது உடலின் எடை தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு, கைகள் இவற்றின் மீதுதான் விழும். தொடைப் பகுதிகள், கால்கள், முன் பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.
  7. பின்பு மெதுவாக மூச்சை விட்டபடி கால்களை மெல்லக் கீழே இறக்க வேண்டுத்.  தரையில் படியும்படி கால்கள் வளையக்கூடாது. களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. முதலில் கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சியில் எளிதாகச் செய்ய முடியும்.
  8. இப்படி மூன்று முதல் ஐந்து தடவைகள் செய்யலாம்.
  9. கால்களை மேலே தூக்கும் போது தொப்புளுக்குக் கீழேயுள்ள பாகம் மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். உடம்பின் அடிவயிற்றின் முன்பகுதி மட்டும் தரையில் படிந்தவாறு இருந்து உடல் எடையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
  10. உள்ளங்கால்கள்¢வளையாமல் ஆகாயத்தை நோக்கி இருத்தல் வேண்டும்.
  11. 11. பிட்டத்தைச் சுருக்கி, இறுக்கமாக வைக்கவும். தொடை தசைகளை விரித்தவாறு வைக்கவும்.
  12. கால்கள் விரைப்பாகவும், சேர்ந்தும், ஒன்றோடு ஒன்று தொடை, முட்டி மற்றும் கணுக்கால் பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.
  13. உடல் எடையைக் கைகளால் தாங்கக் கூடாது. கைகளை நன்கு பின்புறம் நீட்டிக் கொள்ள வேண்டும்.
  14. முடிந்த அளவுக்கு இயல்பாகச் சுவாசித்தவாறு இருக்கவும். ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியையும் தொடைகளையும் தரையிலிருந்து உயர்த்துவது சிரமமாகத்தான் இருக்கும். அடிவயிற்றுத் தசை நார்கள் உறுதி அடைந்து விட்டால் இரு கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் நன்கு உயர்த்த முடியும்.

 

பலன்கள்

  1. சிறுநீரகம் நன்கு செயல்படுவதற்கும் சிறுநீரக நோய்கள் நீங்குவதற்கு துணை புரிகிறது.
  2. வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன. பெருவயிறு எனப்படும் தொந்தி கரைகிறது.
  3. வயிற்றுப் பகுதிக்கு அதிகமான இரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும். இல்லறத்தில் நீடித்த இன்பம் துய்க்க வழிவகுக்கும்.
  4. கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் கோளாறு நீங்கும்.
  5. மூலம் என்கிற கொடிய வியாதியை அறவே அழித்து ஒளிப்பதில் இந்த சலபாசனம் முன் நிற்கிறது.
  6. நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.
  7. முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது.
  8. குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு நீங்கும்.
  9. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுகிறது.

{படித்தேன் படைத்தேன்}

%d bloggers like this: